வரதட்சணை கொடுமையால் பெண் கொலையா? காவல்துறை தீவிர விசாரணை.. நீலகிரி அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை ச்செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்  வினீத் பாலாஜி. இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜி1 காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி முத்துபாண்டீஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், மனஉளைச்சலில் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த முத்துபாண்டீஸ்வரின் குடும்பத்தினர் முத்துபாண்டீஸ்வரின் மரணத்துக்கு அவரது கணவரும், கணவரின் குடும்பத்தினருமே காரணம், எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர் அங்கிருந்தவர்களை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். அவர் அளித்த புகாரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் அவரது மரணத்திற்கு அவரது மாமியார் மாமனாரே காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation about Woman Death In Nilagiris


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->