பாஜக பிரமுகரை காவல் வாகனத்தில் ஏற்றிய விவகாரம் - காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் காவல் ஆயவாளராக இருந்தவர் ரகுராமன். இவர், நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது, இவர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீ காட்சப்பெருமாள் கோவிலில் அர்ச்சகராக வேலை பார்க்கும் பாஜக பிரமுகர் ஒருவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று வாக்குச் சாவடிகளை பார்வையிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த நபர், பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். 

அதன் படி, காவல் ஆயவளர் ரகுராமன் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி எஸ்பி வருண் குமார் அவரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police inspectior change armed forces in trichy


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->