இன்ஸ்டாகிராம் நண்பனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டாகிராம் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு அடுத்த தேனூர் பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் அதே பகுதியை சேர்ந்த நந்தா என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார் .இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி தனது நண்பர் ராம்குமாரருடன் சிறுமியை பார்க்க சென்ற நந்தா ஆளரவமற்ற பகுதிக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அடுத்து நடந்தவற்றை தனது தாயிடம் சிறுமிகள் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக இருந்த நந்தகுமார் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் கைது செய்தனர்.

 சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police have arrested an Instagram friend who intimidated and sexually abused a girl


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->