இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுக்கு காதல் வலை - விசாரணையில் சிக்கிய கள்ளக்குறிச்சி வாலிபர்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் சோகத்துடன் இருந்ததை பார்த்த முதியவர் ஒருவர், அந்த மனைவியிடம் என்ன நேர்ந்தது என்று விசாரித்தார். அப்போது அந்த பெண், தான் சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தை சேர்ந்த அருண்பிரசாத் என்கிற சிட்டு என்பவர் மூலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த முதியவர் தனது மகனுடன் அருண்பிரசாத் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டு, அவரது செல்போனை பறித்து பார்த்தனர். அதில், பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன. 

உடனே அவர்கள் அந்த செல்போனை சங்கராபுரம் போலீசில் ஒப்படைத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர்.
அந்த புகாரின் படி போலீசார் அருண்பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில், அருண்பிரசாத் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களிடம்  'சாட்' செய்து, அவர்களில் சிலரை தனது காதல் வலையில் வீழ்த்தி வீடியோ காலில் ஆபாசமாக தன்னுடன் பேச வைத்ததும், அதனை அவர்களுக்கே தெரியாமல் அதை வீடியோவாக தனது செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டதும் தெரிய வந்தது. 

இதையடுத்து, போலீசார் அருண்பிரசாத்தை கைது செய்ய சென்றனர். ஆனால், அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police case file on young man for harassment in kallakurichi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->