கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகுவதாக அறிவிப்பு; பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்..? - Seithipunal
Seithipunal


கடந்த 2024-இல் நடைபெற்ற பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்றார். 2024-ஆம் ஆண்டு ஜூலை 05-ஆம் தேதி பதவியேற்ற அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டன் பிரதமராக உள்ளார்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அதிரடியாக அறிவித்துள்ளதோடு, அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்க வேண்டுமென தனது தொழிலாளர் கட்சியை கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் 2029-இல் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், கெய்ர் ஸ்டார்மர் தலைமையின் கீழ் மீண்டும் தேர்தலை சந்திப்பது குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். 

இன்று லண்டனில் பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த கெய்ர் ஸ்டார்மெர், தனது ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது;

கடந்த பொதுத் தேர்தலில் எனது தலைமையில் தொழிலாளர் கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தொழிலாளர் கட்சியின் ஆட்சியால், கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டனில் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சியை வழி நடத்துவதற்கு ஏற்ப சிறந்த நிலையில் தான் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் தனது கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

மேலும், அவரின் இந்த விலகல் முடிவை மன்னரிடம் தெரிவித்துவிட்டதாகவும், தனக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை தொடங்குமாறு கட்சி நிர்வாகக் குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரும் ஜூலை 09-ஆம் தேதி வேட்புமனு தொடங்கி ஜூலை 16-ஆம் தேதிக்குள் அது நிறைவடையும் என்றும், போட்டி இருந்தால், செப்டம்பரில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் முன்பாக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறியுள்ளார். அதிகார மாற்றம் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தலைவர் பதவிக்கான போட்டி முடியும் வரை பிரதமராக தொடர்வேன் என்றும், தனக்கு பின் பொறுப்பேற்க இருப்பவருக்கு முழுமையான மற்றும் உறுதியான ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பொறுப்பேற்றபோது இருந்ததைவிட தற்போது பிரிட்டன் மிகவும் வலிமையானதாக மாறி இருப்பதை அவர்கள் உணர்வார்கள் என்பது எனக்குத் தெரியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேப்போன்று, நாட்டின் மிக முக்கியமான பணியில் இருந்து தான் விலகும்போது அதனினும் முக்கியமான மற்றொரு பணியில் அதிக நேரத்தை செலவிடவுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், இன்ப, துன்பங்களில் தனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவி விக்டோரியாவுக்கு சிறந்த கணவனாகவும், என் குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருப்பதற்காக அதிக நேரத்தை செலவிடுவேன் என்று கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Announcement of Keir Starmer resignation as British Prime Minister


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->