#ஈரோடு || வாடகை வீட்டில் பாலியல் தொழில்.. தம்பதி கைது..! - Seithipunal
Seithipunal


வாடகை வீட்டில் பாலியல் தொழில் செய்து வந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நல்லூர் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர்கள் கோவை மாவட்டம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது, அவருடைய மனைவி மோகனாவுடன் நல்லூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. 

அவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் . மேலும், அவர்களிடம் இருந்த பெண்கள மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrested the couple in Erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->