காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட மாணவி.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவி மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம்,  பொம்மிநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் அனுராதிகா. இவர் அங்குள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.  இந்நிலையில்,கடந்த சனிக்கிழமை முதல் அவரை காணாததால் பெற்றோர் தேடிவந்தனர்.

ஊருக்கு வெளியே இருந்த தோட்டத்து வீட்டில் காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின்  உடலை மீட்டு பிரேதபாரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரியும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police are investigating about Young Girl Death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->