கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களை கைது செய்! பாமகவினர் சாலைமறியல் போராட்டம்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சார விவகாரத்தில் தற்போது வரை 55 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கச்சராபாளையம் பகுதியில் தனது கணவர் கள்ளச்சாராயத்தால் தான் இறந்தார், தங்களுக்கும் தமிழக அரசின் நிவாரண நிதி வேண்டும் என்ற பெண்ணின் கோரிக்கையை அடுத்து, அவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் இருவருக்கும் கலளசரய வியாபாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு இவர்கள் ஆதரவாக நடந்ததாகவும், இவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

பாமகவின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த எம்எல்ஏக்கள் இருவரும், இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் அரசியல் விட்டு விலகுகிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கள்ளச்சாரய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திமுக எம்எல்ஏக்கள் இருவரையும் கைது செய்யக்கோரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பாமக மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK protest Kallakurichi Kallasarayam case DMK MLA Arrest Request


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->