விடாமல் அடிக்கும் பாமக பாலு! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கிடுக்குப்புடி கேள்வி! - Seithipunal
Seithipunal


விளையாட்டு மைதானங்களில் ரசிகர்கள் கையில் மதுபானம் இருந்த என்ன ஆகும்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சா்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில், மதுபானம் பரிமாற வசதியாக, தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பித்தது.

இதற்க்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், இந்த அரசாணையை எதிா்த்து வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவை தலைவா் வழக்குரைஞா் பாலு சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உயா்நீதிமன்றம், சா்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடா்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்குரைஞா் பாலு தரப்பில், "விளையாட்டு மைதானங்கள் சா்வதேச கருத்தரங்கு நடைபெறும் இடங்கள் பொது இடங்கள். எனவே, பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்று வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 75 ஆயிரம் போ் திரளும் விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் மதுபானங்கள் வைத்திருக்க அனுமதித்தால் என்னவாகும்? அப்படி அனுமதித்தால் ஏற்படும் விளைவுகள் எவ்வாறு சமாளிக்கப்படும்என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், கல்வி நிறுவன கருத்தரங்குகளில் மதுபானங்கள் பரிமாறக் கூடாது என அறிவிக்கப்பட்டதைப் போல, விளையாட்டு மைதானங்களும் விலக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK BALU Chennai HC Case TNGovt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->