பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு.. காரணம் என்ன? - போலீசார் விசாரணை!
Plus-2 student took a drastic decision What is the reason? Police investigation
திருவெறும்பூர் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காதல் விவகாரமா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் பகுதியை சேர்ந்த தம்பதி மூக்கையன்,ராஜேஸ்வரி,கணவர் மூக்கையன் காய்கறி வியாபாரம் செய்துவ்ருகிறார். இவர்களது 17 வயது மகள், பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் சம்பவத்தன்று தாய் ,தந்தை இருவரும் வேலைக்கு சென்றநிலையில் மாணவி மட்டும் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்ல புறப்பட்ட தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் என்ன ஆனதோ எதனதோ தெரியவில்லை மனைவி திடீரென வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொணடார்.
அவர் வெளிய வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் மின்விசிறியில் மாணவி தூக்குப்போட்டு தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இது குறித்து மாணவியின் தந்தை மூக்கையன் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரமா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.பிளஸ்-2 மாணவி ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Plus-2 student took a drastic decision What is the reason? Police investigation