திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்த இளைஞர் திடீர் மாயம்..!! - Seithipunal
Seithipunal


ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டி பகுதியில் +2 மாணவி ஒருவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு சென்று வரும் வழியில் ஆத்திக்குளத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.  இதனை அடுத்து இருவரும் செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர் அப்போது அந்த இளைஞர் கேட்டதால் அந்த மாணவி தனது படங்களை மாணவி அனுப்பியுள்ளார்.

இந்த பழக்கம் அந்த மாணவியின் தாய்க்கு தெரியவரவே அந்த மாணவியை பழக்கத்தை கைவிடுமாறு எச்சரித்தார். ஆனாலும் அந்த மாணவி கேட்காமல் சரவணனுடன் பழகி வந்துள்ளார்.

இதற்கிடையில், ஒரு நாள் அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற சரவணன் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளான். இதனை அடுத்து பல முறை  அந்த மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளான்.

இந்நிலையில், சரவணன் திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த மாணவி அவரை பற்றி விசாரித்துள்ளார் ஆனால் அவரை பற்றிய விபரம் தெரியவில்லை.

இதனை அடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து  சரவணனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plus 2 student molested youth missing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->