தூத்துக்குடி: பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை பெற்றோர் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவருடைய மனைவி கருப்பாயி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சஞ்சய் பாரதி (16) தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் சஞ்சய் பாரதிக்கு சரியாக படிப்பு வராததால், பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளான். இதனால் பெற்றோர் சஞ்சய் பாரதியை கண்டித்துள்ளனர். இதில் மனவேதனை அடைந்த சஞ்சய் பாரதி நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

இதையடுத்து வேலைக்குச் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சஞ்சய் பாரதியின் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளான். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சஞ்சய் பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plus 1 boy commits suicide in Thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->