கடன் விண்ணப்பங்களை ஒரு மாத காலத்திற்க்குள் நிவர்த்தி செய்யுங்கள். வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


நிலுவையில் உள்ள வங்கி கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஒரு மாத காலத்திற்க்குள் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.

 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான  வங்கியாளர்கள் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் அனைத்து வங்கியின் முலம் 2024 – 25 ஆம் ஆண்டு கடன் அறிக்கைகள் இலக்கு மற்றும் சாதனைகள் குறித்தும், ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம்,முதலமைச்சரின் வீடுகள் புனரமைப்பு திட்டம்,  மகளிர் சுய உதவி குழுகளுக்கு வங்கி கடன் உதவி இலக்கு , மாவட்ட தொழில் மைய சார்பில் நீட்ஸ் , அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர்களுக்கான திட்டங்கள்,  கலைஞரின் கைவினை திட்டம் குறித்தும், முன்னாள் படை வீரர் சார்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் ,  மாணவர்களுக்கான வங்கி கல்வி கடன் திட்டம் , ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இலக்கு மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் நிலுவையில் உள்ள வங்கி கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஒரு மாத காலத்திற்க்குள் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மகளிர்  திட்ட இயக்குநர் செல்வரணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா, இந்திய ரிசர்வ் வங்கி மாவட்ட முன்னோடி மேலாளர் ராதாகிருஷ்ணன், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் திவ்யா, இந்திய வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் இளங்கோ, மாவட்ட தொழில் மைய மேலாளர் சேகர் , இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீநிவாசன் , முன்னோடி வங்கி அலுவலர் ஜெய்கணேஷ், வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Please process the loan applications within a month. Direction to bank officials from the District Collector


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->