#பெரம்பலூர் || வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை.! 3 பேரை பிடித்து அடித்து உதைத்த பொது மக்கள்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம் அருமடல் பகுதியை சேர்ந்த அண்ணன் வீட்டிற்கு, கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் சிறுமியின் அண்ணனும், அண்ணியும் கூலி வேலைக்காக வெளியே சென்று உள்ளனர். அப்போது சிறுமியும் அவரின் அண்ணன் குழந்தை மட்டும் இருந்துள்ளனர்.

சிறுமி தனியாக இருப்பதை அறிந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் சுனில் ராம் (20வயது), காமேஸ்வர் சிங் (19), பெகு நாகசியா (20) ஆகிய மூன்று பேரும் வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

அப்போது சிறுமி சத்தம் போடவே இதனால் பயந்து போன 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். வேலை முடிந்து வந்த தனது அண்ணன் மற்றும் அண்ணனிடம் சிறுமி நடந்த அனைத்து விவரத்தையும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வடமாநில இளைஞர்கள் 3 பேரையும் தேடி பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களின் தாக்குதலால் காயமடைந்த 3 வடமாநிலத்தவர்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வடமாநில இளைஞர்கள் 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர்.

மேலும், போலீசாரின் விசாரணையில் அருமடல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிமெண்டு செங்கல் தயாரிப்பு நிறுவனத்தில் இந்த வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perampalore school girl Harassment case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->