#பெரம்பலூர்: பெண் குழந்தைகளுக்கு அறிய வாய்ப்பு.! கலெக்டர் முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு விண்ணப்பிக்க கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பாணையில், "பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குள் இருக்கும் பெண் குழந்தைகள் தேசிய பெண் குழந்தைகள் விருதை பெற விண்ணப்பிக்கலாம். 

13 முதல் 18 வயது வரை இருக்கும் பெண் குழந்தைகள் தாங்கள் ஆற்றிய வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் உள்ளிட்டவை குறித்து உரிய விவரங்களுடன் விண்ணப்பிப்பது அவசியம். பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு சென்று தேவையான ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த விருதை பெற விண்ணப்பிப்பவர்களுக்கு நவம்பர் 30ம் தேதி கடைசி தேதியாகும். அதற்குள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் தகுதியான பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் விருது வழங்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

perambalur dt girl may apply for award


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->