பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, போட்டியிடும் தொகுதி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது, பிற கட்சிகளில் இணைவது உள்ளிட்டவை நடந்து வருகின்றன. தேர்தல் பணிகளில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரபரப்பாக உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியாவது, “இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தொடர்கிறோம். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக நாங்களும் அறிவிக்கவில்லை, அவர்களும் அறிவிக்கவில்லை.எதிர்க்கட்சிகளின் சார்பில் இந்தியா என்ற பெயரில் கூட்டணியை அமைத்து போட்டியிடுகிறார்கள்.

பல கட்சிகள் சேர்ந்து ஆட்சியைப் பிடித்து குழப்பத்தை ஏற்படுத்தினார்களே தவிர, நிலையான ஆட்சியை கொடுக்கவில்லை. இந்தியாவில் நிலையான ஆட்சி வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நிலையான ஆட்சி தரக்கூடிய ஆற்றல், மோடிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இருக்கிறது” என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pandruti ramachanthiran press meet in chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->