#சென்னை | இளம்பெண்ணை காரில் கடத்திய நாடக காதல் குரூப்ஸ் கூண்டோடு கைது - ஒரு மணிநேரத்தில் போலீசார் அதிரடி! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே நேற்று மாலை 23 வயது இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட காரை பின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் வழிமறித்து, இளம்பெண்ணை போலீசாரின் உதவியுடன் மீட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திராவை நோக்கி சென்ற காரை ஆந்திரா போலீசார் வழிமறித்து, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருவள்ளூர் : பள்ளிப்பட்டு அடுத்துள்ள அத்திமாஞ்சேரி பேட்டை காலனியை சேர்ந்த 30 வயது உடைய ஆட்டோ ஓட்டுனர் ஜெயக்குமார் என்பவர் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து, அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்ய கடத்தி ஆந்திரா நோக்கி சென்றுள்ளார்.

இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அதே கிராமத்தை சேர்ந்த மக்கள், காரை பின் தொடர்ந்து சென்று ஆந்திராவின் எல்லையில் வழிமறித்து, ஆந்திர போலீசாரின் உதவியுடன் இளம்பெண்ணை மீட்டனர். 

மேலும் ஜெயக்குமார் மற்றும் அவரின் நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இளம்பெண் கடத்தப்பட்டு ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pallipattu drama love groups arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->