பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.., பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு.!
Palani Temple Association Announce Palani Temple Visiting Peoples
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகளவில் செல்ல வாய்ப்புள்ள இடங்களுக்கு கட்டுப்பாடுகள் அவ்வப்போது தளர்த்தப்பட்டும், கடுமையாக்கப்பட்டும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கோவில்களுக்கு மக்கள் இயல்பாகவே அதிகளவு செல்லும் நிலையில், தை மாதங்களில் மக்கள் முருகன் கோவிலுக்கு அதிகளவு செல்வது வழக்கமான விஷயமாகும். அந்த வகையில், பழனி கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பில், " ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே பழனியில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Palani Temple Association Announce Palani Temple Visiting Peoples