தாழ்வாக வட்டமடித்த விமானம்… திருச்சி வானில் பதற்றம்! - பின்னர் வெளிவந்த உண்மை என்ன...?
low flying aircraft circled area causing panic Trichy skies What truth later emerged
திருச்சி மாநகர வானில் நேற்று எதிர்பாராத காட்சியொன்று பொதுமக்களை பதற்றத்தில் ஆழ்த்தியது. தனியார் விமானம் ஒன்று அசாதாரணமாக மிகத் தாழ்வாக பறந்து, மாநகரைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தது.
இதை கண்ட மக்கள், விமானம் தரையிறங்க முடியாமல் சிக்கலிலா? அவசர நிலை ஏதேனும் ஏற்பட்டதா? என்ற சந்தேகத்தில் அதிர்ச்சியடைந்தனர்.
சில நிமிடங்களில் நகரம் முழுவதும் பரபரப்பு நிலவியது.இந்த நிலையில், விமான நிலைய அதிகாரிகள் அளித்த விளக்கம் பொதுமக்களின் கவலையை தணித்தது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக மண்வளம் (Runway Soil Strength) தொடர்பான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்த ஆய்வின் ஒரு பகுதியாக, விமானங்கள் தரையிறங்கும் மற்றும் புறப்படும் நிலைகளில் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆய்விற்காக பயன்படுத்தப்பட்ட விமானமே, மிகவும் தாழ்வான உயரத்தில் நகரத்தைச் சுற்றி வட்டமடித்ததாக அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இது முழுக்க முழுக்க திட்டமிட்ட தொழில்நுட்ப ஆய்வு நடவடிக்கை என்றும், எந்தவித அவசர நிலையும் இல்லை என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மண்வளம் ஆய்வு நிறைவடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும், அதன் பின்னர் வழக்கமான விமான போக்குவரத்து முழுமையாகத் தொடரும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
low flying aircraft circled area causing panic Trichy skies What truth later emerged