எதிர்பாராத விதமாக விழுந்த வீட்டு சுவர்.. ஒருவர் பலி.. அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தை..! - Seithipunal
Seithipunal


வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் , வடுகூர் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு திருமணமாகி ஜான்சி ராணி என்ற மனைவியும் கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர். மாடசாமி குடும்பத்தினருடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், மூவரும் வீட்டில் இருந்தபோது திடீரென  வீட்டு சுவர் இடிந்துமேல் விழுந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாடசாமி மற்றும் ஜான்சி ராணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில்,மாடசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நிலையில் ஜான்சி ராணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அவர்களது மகள் கனிஷ்கா காயங்கள் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One person was killed when the wall of the house collapsed


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->