குன்னூர் அருகே கியாஸ் கசிவால் தீ விபத்து - ஒருவர் பலி - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வீட்டில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் காரக்கொரை பகுதியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி அனுசியா. இந்நிலையில் கோபாலின் சகோதரி கண்ணம்மாள்(58) பண்டிகைக்காக இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து இன்று காலை வீட்டில் கேஸ் சிலிண்டர் காலியாக இருந்ததால், மற்றொரு சிலிண்டரை மாற்றுவதற்கு கண்ணம்மாள் வீட்டின் அருகே வசித்து வரும் நடராஜ் என்பவரை அழைத்துள்ளார்.

அப்பொழுது சிலிண்டரை மாற்றும்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணம்மாள் மற்றும் நாகராஜ் வீட்டுக்குள்ளேயே மயங்கியுள்ளனர். இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டு கண்ணம்மாள் மற்றும் நாகராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் கண்ணம்மாள் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அருவங்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One killed in Fire accident due to gas leakage in coonoor near


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->