ஒன்றரை வயது குழந்தை மாயம்.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


ஒன்றரை வயது குழந்தை மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அம்பத்தூர் காந்திநகர் தாலுகா அலுவலகம் பின்புறத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பட்டு வருகிறது. இதில் வேலை செய்வதற்காக 100க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் அங்கு தங்கி இருந்துள்ளனர்.

இதில், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் அங்கு தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கிஷோரின் ஒன்றரை வயது குழந்தை திடீரென மாயமானது .

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர் ஆனாலும் குழந்தை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் குழந்தையை யாரேனும் கடத்தி இருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One and a half year old child missing In Ambathur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->