ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கன அடியாக உயர்ந்த ஒகேனக்கல் நீர்வரத்து...! தொடரும் தடையால் அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
Okenakkal water level rises to 1 lakh 5 thousand cubic feet Tourists in shock due to ongoing disruption
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே கர்நாடகா மாநிலத்தில் தொடங்கிவிட்டது.இதன் காரணமாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அம்மாநிலத்திலுள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கூடுதலாக கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

மேலும், காவிரியின் கபிலா ஆற்றின் குறுக்கே மைசூரு மாவட்டம், கபினி அணையும் மற்றும் மண்டியா மாவட்டம், கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், ஏற்கனவே நிரம்பிவிட்டது. இதனால் இந்த இரு அணைகளிலிருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவானது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்றுமாலை நீர்வரத்து 98,000 கனஅடியாக வந்தது. இதனால் தற்போது இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 1,05,000 கன அடியாக உயர்ந்துள்ளது.இதன் காரணமாக, சினிபால்ஸ், ஐந்தருவி,மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது, மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை க்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. மேலும்,சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் யாராவது குளிக்கிறார்களா என காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ,காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Okenakkal water level rises to 1 lakh 5 thousand cubic feet Tourists in shock due to ongoing disruption