வீடியோ! பனைமரம் ஏறிய சீமான்! கள் தடை நீக்கக் கோரி போராட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கள் இறக்கும் தடை நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆக்கட்சியினர் திருச்செந்தூரில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியதாழை பகுதியில் நடந்த இந்த போராட்டத்தில், பனைமரத்தில் ஏறி கள் இறக்கும் செயலை நேரடியாக செய்தார் சீமான். ஏற வசதியாக பனைமரத்தில் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. கள் இறக்கும் உபகரணங்களுடன், பாரம்பரிய முறையில் அவர் பனைமரத்தில் ஏறினார். இதுகுறித்த காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போராட்டத்தில் சீமானுடன் பனையேறும் தொழிலாளர்களும் பங்கேற்றனர். தமிழகத்தில் கடந்த 33 ஆண்டுகளாக கள் இறக்கும் செயலுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அந்தத் தடை நீக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.

கள் இயக்கம் கடந்த 17 ஆண்டுகளாக பலவகையான முறையில் இந்தக் கோரிக்கையை முன்னெடுத்து வரும் நிலையில், சீமானின் இந்த நடவடிக்கை புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Seeman Protest Kal Irakkum porattam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->