சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை! - Seithipunal
Seithipunal


சாதி, மதத்தை தவிர்த்து வாழ விரும்புவோருக்கான *'சாதி, மதம் இல்லை'* சான்றிதழ் வழங்க தமிழக அரசு உரிய அரசாணை வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், தனது குழந்தைகளுக்கு அரசு சலுகைகள் தேவையில்லை என்றும், சாதி-மத அடையாளங்கள் வேண்டாம் என்றும் கூறி, தாசில்தாரிடம் சான்றிதழ் கோரி வழக்கு தொடுத்தார். தாசில்தாருக்கு இது வழங்க அதிகாரம் இல்லை என அரசு தரப்பு கூறிய நிலையில், வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், ஏற்கனவே திருப்பத்தூர், கோவை, அம்பத்தூர் தாசில்தார்கள் இத்தகைய சான்றிதழ்கள் வழங்கியதாக குறிப்பிடினர். அதனைப்போல் மனுதாரருக்கும் ஒரு மாதத்தில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

சாதி மறுப்பின் அடிப்படையில் சான்றிதழ் கோரிய சந்தோஷின் செயலை நீதிபதிகள் பாராட்டியதோடு, வருவாய்த் துறைக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்கி, தமிழக அரசே நேரடியாக அரசாணை வெளியிட வேண்டுமென பரிந்துரைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No Religion Communities Certificate case Chennai HC TNgovt


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->