புதிய அவதாரம் எடுத்து காட்சி தந்த நித்தியானந்தா.. கடுப்பான பக்தர்கள்.!
Nithyananda Photoshoot like Sri Govinda Perumal Lord 10 April 2021
சர்ச்சைகளின் மன்னன், இன்டர்போல் காவல்துறையால் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
ஆட்கடத்தல், கற்பழிப்பு என்று பல்வேறு புகார்களின் பேரில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக கருதப்படும் நித்யானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி, அங்கு தனது சிஷ்யர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்திய அரசால் தற்போது வரை இவர் கைது செய்யப்படாமல் இருக்கும் நிலையில், கைலாசா நாட்டிற்கு பக்தர்கள் வந்தால் அவர்கள் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப் படுவார்கள் என்றும், கைலாச நாட்டிற்கான அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட்டை பெறும் வகையிலும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
நித்தியானந்தா அவ்வப்போது பல சர்ச்சைகள் பேசினாலும், தனது கடந்த கால வாழ்க்கை வரலாறுகளை கூறி அவ்வப்போது ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்நிலையில், பெருமாள் கடவுள் போல நித்யானந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் பெருமாள் பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Nithyananda Photoshoot like Sri Govinda Perumal Lord 10 April 2021