தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.!
NIA officers raid in tamilnadu
தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனை கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதனால், கோவையில் உக்கடம் உள்பட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், கோவை உக்கடம் பகுதியில் அபிபுல் ரகுமான் என்பவர் வீட்டிலும், நெல்லை ஏர்வாடியில் பக்ரூதின் அலி என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனை நிதி வசூல், மூளைச்சலவை செய்தல், உபகரணங்கள் கொடுத்து உதவுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் நடைபெற்று வருகிறது. கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
English Summary
NIA officers raid in tamilnadu