தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் "இடியுடன் கூடிய மிதமான மழை"... வானிலை மையம் தகவல்...!
Next 3 hours thunderstorm rain in 20 districts of tamilnadu
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Next 3 hours thunderstorm rain in 20 districts of tamilnadu