உ.பி : திருமண விழாவில் மணமகனின் சகோதரரை மணமுடித்த மணமகள்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டம் அரியானா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, தவாய் குர்த் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

அதன் படி, திருமண நாளன்று, மணமகள் வீட்டுக்கு மணமகன் தனது உறவினர்கள் உடன் வந்துள்ளார். அவர்களை மணமகள் வீட்டார் மிகவும் மகிழ்ச்சியுடன் சிறப்பாக வரவேற்றனர். அதேபோல்  திருமணமும் நடைபெற்று முடிந்தது. இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் பேசி சிரித்துக்கொண்டு இருந்தனர். 

ஆனால், அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஏனென்றால், மணமகனின் முதல் மனைவி தனது குழந்தைகளுடன் மணமகள் வீட்டிற்கு வந்து உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் போலீசாருகுத்த தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது அந்த பெண், தன்னிடம் எதுவும் தெரிவிக்காமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். எங்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றுத் தெரிவித்துள்ளார். 

இதனால், திருமண வீட்டில் கலவரம் நடந்ததால், போலீசார் இரு தரப்பினைரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து, மூத்த பஞ்சாயத்து தலைவர்கள் சிலரும் காவல் நிலையத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு முடிவு செய்தனர். 

அதில், இரண்டாவது திருமணம் செய்த மனைவியை மணமகன் விவாகரத்து செய்து, அந்த மணமகள், மணமகனின் சகோதரரை திருமணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி, மணமகனின் சகோதரரை மணமகள் கரம்பிடித்து அவருடன் சென்றார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh bride married grooms brother in wedding day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->