"தோல்விக்கான காரணமே தெரியாமல் தவிக்கும் திமுக" - திருமாவளவனை விமரிசித்த ஆ.ராசாவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!
DMK is Blind to Its Defeat Minister Aadhav Arjuna Fiercely Condemns A Raja Low Level Attack on Thirumavalavan
தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததைச் சகித்துக் கொள்ள முடியாமல், திமுக எம்பி ஆ.ராசா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ‘முடத்தெங்கு’ கவிதைச் சாடலுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
திமுக-வின் ஆற்றாமை: "நடந்து முடிந்த தேர்தலில் தாங்கள் ஏன் தோற்றோம் என்ற காரணமே தெரியாமல் திமுகவினர் இன்னும் தவித்து வருகிறார்கள். எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை" என்று ஆதவ் அர்ஜுனா சாடியுள்ளார்.
தரம்தாழ்ந்த விமர்சனம்: 'அதிகாரம் ஒருவரிடம் மட்டுமே குவிந்து கிடக்கக் கூடாது' எனத் தமிழ்நாட்டில் முதன்முதலில் துணிச்சலுடன் குரல் எழுப்பியவர் விசிக தலைவர் தொல். திருமாவளவன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த அத்தகைய உன்னதத் தலைவரை ஆ.ராசா தனது கவிதையில் சொல்லத் தகாத வார்த்தைகளால், தரம்தாழ்ந்து விமர்சித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அரசியல் கலாச்சாரம்: பொதுவாகவே ஏதேனும் அரசியல் சிக்கல் அல்லது தோல்வி ஏற்படும் போதெல்லாம், பெண்களையோ அல்லது விளிம்புநிலைத் தலைவர்களையோ இழிவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்துவது திமுகவினரின் வாடிக்கையாகிவிட்டது.
வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்றதை ஒட்டுமொத்த விசிக தொண்டர்களும் திருவிழாப்போல் கொண்டாடி வரும் வேளையில், திமுக-வின் இத்தகைய அநாகரிக அரசியல் விமர்சனங்களை மக்கள் புறந்தள்ளுவார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிக ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
DMK is Blind to Its Defeat Minister Aadhav Arjuna Fiercely Condemns A Raja Low Level Attack on Thirumavalavan