திருப்பூர் || பல்லடத்தில் கட்சி கொடிக்கம்பங்கள் சேதம்.! மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த காலனி பகுதியில், அனைத்து அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளது.  சில மர்ம நபர்கள் இந்தக் கொடிக்கம்பங்களை பிடுங்கியும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர். 

இதையடுத்து இந்தக் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

இதேபோன்று பா.ஜ.க. சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, பணிக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன் தலைமையில் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அரசியல் கட்சி கொடிகளின் கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near tirupur political parties flag damage


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->