தஞ்சாவூர் : தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.!
near thanjavur man died in railway track
தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள சோழகம்பட்டி ரெயில்வே நிலைய தண்டவாளத்தில் சுமார் 50 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது.
இதை, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தைப் பார்வையிட்டனர்.
அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று எந்த விவரமும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, அந்த நபர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
English Summary
near thanjavur man died in railway track