தாத்தா.. ரெயில்வே மேம்பாலம் அமைத்து தங்க தாத்தா.! முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த சிறுமி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் காரில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்தபடி, வீடியோ ஒன்று எடுத்துள்ளார். 

அந்த வீடியோவில் அந்த சிறுமி தெரிவித்துள்ளதாவது, "சி.எம். தாத்தா" நான் சிவகாசியில இருந்து பேசுகிறேன். சிவகாசியில் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தாங்க தாத்தா. தினமும் பள்ளிக்கு போகும் போது ரெயில்வே கேட் போட்டுடுறாங்க தாத்தா. 

அதனால நான் தினமும் பள்ளிக்கு தாமதமாக போகிறேன் தாத்தா." என்று அந்த வீடியோவில் சிறுமி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோவை சிறுமியின் பெற்றோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near sivakasi school girl request build railway bridge to cm stalin vedio viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->