சிவகங்கை அருகே கிணற்றில் விழுந்து முதியவர் பலி.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழச்சிவல்பட்டி அருகே ஆவிணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜ கேசரி. இவர் மகன் சுப்பிரமணியன். இவர் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில், இவருடைய வீட்டின் முன்பு உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் உள்ளவர்கள், மகன் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் அளித்துள்ளனர். 

இதையறிந்த, அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கிணற்றில் தியாகராஜ கேசரியின் உடல் கிடந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த தியாகராஜ கேசரியின் உடலை மீட்டுள்ளனர். அதன் பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near sivakangai old man died in well


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->