சேலம் : எண்ணெய் கடையில் ஒரு கோடி மோசடி செய்த தொழிலாளி கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் ரகுமான். இவருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் கடையில்  பதினாறு ஆண்டுகளாக கருணாகரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். 

இந்த நிலையில் ரகுமான் கடைக்கான வரவு - செலவு கணக்குகளை சரிபார்த்துள்ளார். அப்போது கருணாகரன் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கடையிலிருந்து சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்திருந்தது தெரியவந்தது. 

இது தொடர்பாக ரகுமான் கருணாக்கனிடம் கேட்ட போது, கருணாகரன் ரகுமானை மிரட்டியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரகுமான் சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கருணாகரன் மோசடி செய்த பணத்தை தனது மனைவி பவித்ராவின் வங்கி கணக்கில் செலுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கணவன், மனைவி இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில் கருணாகரனும் அவரது மனைவியும் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் படி, போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று கருணாகரன் மற்றும் அவரது மனைவியையும் கைது செய்து அழைத்து வந்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near salem man arrested for money fraud in oil shop


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->