சேலத்தில் திருநங்கையாக மாற முயன்ற சிறுவன் உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். பதினேழு வயதுடைய இவர் அதேபகுதியில் உள்ள தனியார் மீன் பண்ணையில் வேலை செய்து வந்தாா். இவர் கடந்த சில நாட்களாக வேலை முடிந்து வீட்டிற்கு வராமல், திருநங்கைகளுடன் சுற்றி வந்துள்ளார்.

அதன் பின்னர், தானும் திருநங்கையாக மாற வேண்டும் என்று முயற்சி செய்தார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த தாய், அவனை சந்திக்க வந்த திருநங்கைகளுடன் பேச விடாமல் தடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேஷ் கடந்த 22 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வெங்கடேஷ் நேற்று முன்தினம் வேலை பார்த்து வந்த மீன் பண்ணையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநங்கையாக மாற முயன்ற சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Near Salem boy died for tried to become trans gender


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->