'பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்': இபிஎஸ் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


அ​தி​முக பூத் கிளை அமைக்​கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால், அதற்​கென நியமிக்​கப்​பட்ட மாவட்ட பொறுப்​பாளர்​கள், அப்​பொறுப்​பு​களில் இருந்து விடுவிக்​கப்​பட்டுள்ளனர். அவர்​கள் அந்தந்த மாவட்டங்களில் கட்​சிப் பணி​கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடு​படு​மாறு அக்கட்சியின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்​கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 

'தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு உட்​பட்ட ஒன்​றிய, நகர, பேரூ​ராட்சி மற்​றும் மாநக​ராட்​சிப்பகு​தி​களில் பூத் கிளை அமைப்புகளை ஏற்படுத்துவ​தற்காக, மாவட்​டம் ​வாரி​யாக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்டு அப்​பணி​கள் முழு​மையடைந்​துள்​ளன. இந்​நிலை​யில், மாவட்​டப் பொறுப்​பாளர்​கள் அனை​வரும் அப்​பணி​யில் இருந்து விடுவிக்​கப்​படு​கிறார்​கள். இவர்​கள் தங்​கள் மாவட்டத்​துக்கு உட்​பட்ட, தாங்​கள் சார்ந்த சட்​டப்​பேரவை தொகு​திகளில் கட்​சிப் பணி​கள், தேர்​தல் பணி​களில் ஈடுபட வேண்​டும்.

சென்னை புறநகர், சேலம் மாநகர், கன்​னி​யாகுமரி மேற்கு ஆகிய மாவட்​டங்​களில் பூத் கிளை அமைக்​கும் பணி​கள் இன்​னும் நிறைவு​பெறாத​தால், அம்​மாவட்​டங்​களுக்கு நியமிக்​கப்​பட்​டுள்ள மாவட்​டப் பொறுப்​பாளர்​கள் தொடர்ந்து அப்​பணி​களை மேற்​கொள்​வார்​கள். பூத் கிளை நிர்​வாகி​கள் அனை​வரை​யும் ஆன்​லைனில் ஒருங்​கிணைத்​து, தேர்​தல் பணி​களை விரை​வாக மேற்​கொள்ள பயிற்சி அளிக்க தகவல் தொழில்​நுட்​பப் பிரிவைச் சேர்ந்த பொறுப்​பாளர்​களுக்​குத் தேவை​யான ஏற்​பாடு​களை​யும் செய்து கொடுத்​து, அவர்​களுக்கு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS urges booth committee in-charges to show seriousness in district party work


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->