மதுரை விமானநிலையம் அருகே அம்பேத்கரின் சிலை திறப்பு விழா - முதலவர் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக  நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தென்காசி புறப்பட்டார். 

அதன் பின்னர் நேற்று காலை தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் நேற்று இரவு மதுரைக்கு வந்தார். இதையடுத்து, மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் தே.கல்லுப்பட்டி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, மதுரை மாநகராட்சி பொன்விழா நுழைவு வாயிலை திறந்து வைத்து, மாநகராட்சி அரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டுத்திட்டத்தை காணொளி கட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகளும் பங்கேற்க இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையத்திற்கு  அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்க உள்ளார்.

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சருடன் மூத்த அமைச்சர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். மேலும், முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madurai airport ambetkar statue mk stalin open


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->