ஈரோடு : தெருநாய்கள் அட்டகாசம் - கன்றுக்குட்டி மற்றும் 4 ஆடுகள் பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள வில்லரசம்பட்டி ஒண்டிக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனது வீட்டில் ஆட்டு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார். 
 
இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற பின்னர் அன்று மாலை வீட்டிற்கு வந்து ஆடு, மாடுகளை வீட்டின் முன்புறம் கட்டி உள்ளார். 

இந்நிலையில், நேற்று சுமார் நான்குக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திடீரென பழனிசாமியின் வீட்டில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியையும், ஆடுகளையும் கடித்து குதறியது.  

இந்த சத்தம்கேட்டு எழுந்து வந்த பழனிசாமி தெரு நாய்களை விரட்டி அடித்துள்ளார். ஆனால், அதற்குள் நாய்கள் கடித்து குதறியதால் ஒரு கன்றுக்குட்டி மற்றும் நான்கு ஆடுகள் உயிரிழந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் இரண்டு ஆடுகள் பலியானது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது, 'எங்கள் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆடு, மாடுகளை கடிக்க தொடங்கிய இந்த தெரு நாய்கள் கூடிய விரைவில் எங்களையும் கடிப்பதற்கான வாய்ப்புள்ளது. 

இதனால் குழந்தைகளை வெளியில் விளையாட விடுவதற்கு கூட பயமாக உள்ளது. ஆகவே, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்தி, இதுபோன்ற சம்பவம் தொடராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near erode four goats died for dog bit


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->