ஏற்காடு அருகே வாலிபர் வெட்டிக் கொலை - தந்தை மகன் கைது.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடுத்த கும்மிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவருடைய மகன் தங்கராஜ் என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. 

இந்த தகராறில் கோபமடைந்த தங்கராஜ் மற்றும் அவரது தந்தை மாணிக்கம் உள்ளிட்டோர் சேர்ந்து சிவக்குமாரை கொடுவாளால் வெட்டி, இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த சிவக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அதன் பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த தங்கராஜ், அவரது தந்தை மாணிக்கம் ஆகியோரை கைது செய்தனர். 

அப்போது போலீசாரிடம் சிவகுமார் பரபரப்பு வாக்குமூலம் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, "எனது மனைவிக்கும், சிவக்குமாருக்கும் வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சிவகுமார் புஷ்பாவிடம் எங்கள் குடும்பத்தை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் எங்கள் வீட்டில் தினமும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவகுமார் தவறாக பேசுகிறார் என்று ஏன் மனைவியிடம் பலமுறை தெரிவித்தோம் ஆனால் சிவகுமார் ஆசை வார்த்தைகளை கூறி ஏன் மனைவியின் மனதை முற்றிலுமாக மாற்றினார். இது நாளடைவில் கள்ள காதலாக மாறியது.

இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வவந்ததை அறிந்த நான் இருவரையும் கண்டித்தேன். சிவகுமாரையும் தனியாக எச்சரித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த நானும், எனது தந்தையும் சேர்ந்து, சிவக்குமாரை வெட்டிக் கொன்றுவிட்டு, போலீசாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக தலைமறைவாக இருந்தோம்" என்று தங்கராஜ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near erkad young man died son and father arrested


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->