திண்டுக்கல்லில் பரபரப்பு.! துணிவு படம் பார்த்து வங்கியில் கொள்ளையடிக்க சென்ற வாலிபர்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு சாலையில் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் சர்வசாதாரணமாக உள்ளே சென்று அங்குள்ள ஊழியர்களை கட்டிப்போட்டு மிளகாய் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது வங்கி ஊழியர்களில் ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பித்து வெளியில், ஓடிவந்து கத்தி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் வங்கிக்குள் நுழைந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த வாலிபர் கட்டி போட்டிருந்த மற்ற வங்கி ஊழியர்களையும் காப்பாற்றினர். அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக வாலிபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அணில் ரகுமான் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால், "துணிவு" திரைப்படம் பார்த்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near dindukal young man arrested for robbery in bank


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->