திண்டுக்கல் : பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை தீ வைத்து எரித்த பெண் கைது.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை அருகே கண்ணுமேய்க்கி பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார். பெயிண்டரான இவருக்கும் அதே ஊரில் கணவரை இழந்த பெண்ணான மகேஸ்வரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முத்துக்குமார் மகேஸ்வரியிடம் இருந்து பணம் மற்றும் மூன்று பவுன் நகைகளை வாங்கியுள்ளார். இந்த நகை மற்றும் பணத்தை மகேஸ்வரி திரும்பக்கேட்ட போது முத்துக்குமார் தர மறுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மகேஸ்வரியிடம் அடிக்கடி பணம் கேட்டும், பாலியல் தொந்தரவு செய்தும் வந்துள்ளார்.

இதையடுத்து இருவரும் கடந்த பிப். 28ம் தேதி இரவு ஒரு காட்டுப்பகுதிக்கு இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளனர். அதன் பின்னர் இருவரும் காட்டில் தனிமையில் இருந்தபோது, மகேஸ்வரி திடீரென தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முத்துக்குமார் மீது ஊற்றி, தீ வைத்துள்ளார். 

இதில் பலத்த காயம் அடைந்த முத்துக்குமார் டூவீலரை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindukal woman arrested for fire to man


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->