இன்ஸ்டாகிராம் நண்பர்கள் மூலம் கஞ்சா வாங்கி விற்பனை செய்த என்ஜினீயர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகத்தின் படி, ஒரு வீட்டிற்குள் புகுந்து சோதனை மேற்கொண்டனர். 

அந்த சோதனையில் அங்கு கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எம்.பி.ஏ பட்டதாரியான ரிஷி மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளான ரூபஸ், அவினாஷ் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர். 

மேலும், அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த இரண்டு மாதங்களாக வேலை ஏதும் இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். 

மேலும், அவர்கள் இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவரின் மூலம் கோயம்புத்தூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து நண்பர்கள் மூலம் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai enjineers arrested for drugs sale


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->