கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து.! பள்ளத்தில் விழுந்ததில் பத்து பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


இன்று அதிகாலை தனியார் ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி, 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த பேருந்து, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று ஆம்னி பேருந்தை  இடிப்பது போல் வந்தது. 

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து வெளியேற முயன்றனர். அப்போது பேருந்தின் அவசர கால வழி திறக்காததால் முன்பக்க கண்ணாடியை உடைத்து அந்த வழியாக பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இந்த விபத்தினால், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று அங்கிருந்து மாற்று வாகனத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டடனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai amni bus accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->