தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்குப் பரிசளிப்பு...முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்ட வெற்றி பெற்ற சிலம்பம் மற்றும் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்குப் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பரிசளித்துப் பாராட்டு தெரிவித்தார்.

புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா கோரிமேடு அப்பா பைத்திய சாமி கோயில் அருகே உள்ள முதலமைச்சர் ரங்கசாமி இல்லத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் துணைத் தலைவர் இரமேஷ் வரவேற்புரை வழங்கினார். சங்கத்தின் ஆலோகர் மற்றும் பணி நிறைவு வட்டாட்சியர் ஐயனார் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பரிதா, மகளிர் பொறுப்பாளர் விஜயலட்சுமி நோக்கவுரை கூறினர். மண்டல அமைப்பாளர்கள் சந்துரு ஆனந்தன் இரவி ஆசிரியர் தனராஜா ஜாகிர் உசேன் சுரங்கத்துறை பொறியாளர் செல்வராஜ் காவலர் கணபதி கமலக்கண்ணன் முனியன் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்றுச் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்ட சிலம்பம் மற்றும் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டு தெரிவித்தார். பாகூர் கரிகாலச் சோழன் சிலம்பாட்டக் குழுப் பயிற்சியாளர் அன்புநிலவன் நன்றி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

National level athletes are being awardedChief Minister Rangasamys congratulations


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->