ரத்தக்காயத்துடன் அவசர ஊர்தியை நிறுத்திய வாலிபர்... அரங்கேறிய கொடூரம்..!
Nagapattinam Youngster Murder or Suicide Attempt Police Investigation Mystery
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி முச்சந்தி சாலையில் வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு, உடலில் ரத்த காயத்துடன் ஓடிவந்தார். இதன்போது மற்றொரு பணிக்காக சென்று கொண்டு இருந்த அவசர ஊர்தி மூலமாக, அவசர ஊர்தி ஓட்டுநர் மகேந்திரன் (வயது 25) என்பவரின் உதவுடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இவர் யார் என்று எந்த தகவலும் இல்லாமல், மயக்க நிலையில் இருந்த வாலிபருக்கு உடனடி சிகிச்சை மேற்கொண்டு, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், வாலிபர் திருத்துறைப்பூண்டி பகுதியை சார்ந்த மகேந்திரன் (வயது 20) என்பது தெரியவந்தது.
இவர் திருப்பூரில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதன்பின்னர் வெளியே சென்ற மகேந்திரன் வீட்டிற்கு திரும்பவில்லை. இவர் யாரால் கொலை செய்யப்பட்டார்? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்த தகவல் அவர் கண்விழித்ததும் தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Nagapattinam Youngster Murder or Suicide Attempt Police Investigation Mystery