5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர் ...! மூதாட்டியின் அலறல்...! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் பொன்னுரிக்கி வீட்டை சேர்ந்த தங்கப்பன் என்பவருடைய மனைவி 77 வயதான லீலாபாய். இவர் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பேருந்தில்,நேற்று முன்தினம் மாலையில் களியக்காவிளை செல்வதற்காக ஏறினார்.

அந்த பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.அதன் பிறகு களியக்காவிளை வந்ததும் பேருந்திலிருந்து லீலாபாய் இறங்கினார்.

அப்போது தனது கழுத்தில் போட்டிருந்த 5 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், பேருந்தில் கூட்ட நெரிசலை உபயோகித்துக்கொண்டு மர்ம நபர் நகை அபேஸ் செய்தது தெரியவந்தது.

அதன் பிறகு கவலையில் ஆழ்ந்த லீலாபாய்  இதுபற்றி களியக்காவிளை காவலில் புகாரளித்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்குபதிவு செய்து ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகையை திருடிய நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mysterious person stole 5 pound jewel screams an old woman


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->