சமாதானம் செய்ய வந்த அண்ணனுடன் சல்லாபம்.! உல்லாச நேரத்தில், உள்ளே புகுந்த தம்பி.! - Seithipunal
Seithipunal


சென்னை ஜாபர்கான் பேட்டை நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமரேசன் என்பவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவி இருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துள்ளனர். எனவே, குமரேசன் தன்னுடைய திருமணமாகாத அண்ணன் ராஜேஷை அழைத்து பிரிந்துபோன மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார். 

இதன் காரணமாக சண்முகப்பிரியாவை சமாதானம் செய்ய ராஜேஷ் சென்றுள்ளார். இதில் சண்முகப்பிரியாவுக்கும் ராஜேஷுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் குமரேசனுக்கு தெரியவர ஆத்திரம் அடைந்த அவர் உடனடியாக அண்ணனை அழைத்து இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். 

இருப்பினும் இருவரும் கள்ளதொடர்பை நிறுத்தாமல் தொடர்ந்து வந்தனர். இதுபோலவே, ஒருநாள் ராஜேஷ் தன்னுடைய வீட்டிற்கு சண்முகப்பிரியாவை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். விஷயம் கேள்விப்பட்டு பதறியடித்து ஓடிவந்த குமரேசன் அண்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். 

இரும்பு கம்பியால் அண்ணனை ஒரே போடாக போட்டு குமரேசன் கொலை செய்து இருக்கின்றார். அப்போது படுகாயமடைந்த அவரை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

murder in chennai saidapet


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->