திரு.தீரன் சின்னமலை அவர்கள் நினைவு தினம்!.
Mr Thiran Chinnamalais remembrance day
இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட மாவீரன் திரு.தீரன் சின்னமலை அவர்கள் நினைவு தினம்!.
இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai) 1756ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.
இவர் இருந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு வழங்கப்பட்டு வந்தபோது, ஒருமுறை இவர் வரிப்பணத்தை கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார்.
வரி கொண்டு சென்ற ஊழியரிடம் 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்' என்று கூறினார். அப்போதிலிருந்து, 'சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.
இவர் ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி இளைஞர்களுக்கு போர்ப் பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். 1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.
இவரை போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை தூக்கிலிட்டது. பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த தீரன் சின்னமலை தனது 49வது வயதில் 1805 ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி அன்று மறைந்தார்.

விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் திரு.உதம் சிங் அவர்கள் நினைவு தினம்!.
இந்தியப் புரட்சியாளர் உதம் சிங் (Udham Singh டிசம்பர் 26, 1899 - ஜூலை 31, 1940) இவர் 1919 ஆம் ஆண்டு அமிர்தசரஸில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த இந்தியாவின் பஞ்சாப் முன்னாள் லெப்டினன்ட் கவர்னரான மைக்கேல் ஓ டயரை பழிவாங்கும் வகையில் 21 ஆண்டுகள் காத்திருந்து கேக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் கிழக்கிந்திய சங்கம், மத்திய ஆசிய சங்கம் இவற்றின் கூட்டம் நடந்தது. மைக்கேல் ஓ டையர் ஒரு பேச்சாளர்.
உதம் சிங் ஒரு புத்தகத்தில் ரிவால்வர் மாதிரியே வெட்டி அதனுள் ரிவால்வரை வைத்து எடுத்துச் சென்றார். சுவரின் அருகில் நின்றார். கூட்ட முடிவில் 1940 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி மைக்கேல் ஓ டயரை சுட்டுக் கொன்றார்.ஆனால் உதம் சிங் தப்பிக்க முயற்சி செய்யவில்லை. பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஜூலை 31, 1940 இல் தூக்கிலிடப்பட்டார்.
நேதாஜி உதம் சிங்கின் செயலை வரவேற்றார். R.C. ஜாகர்வாரா தனது "CONSTITUTIONAL HISTORY OF INDIA AND NATIONAL MOVEMENT" என்ற நூலில் உதம் சிங்கின் தீரச்செயல் இந்திய சுதந்திரத்திற்குப் புத்துணர்வு ஊட்டியது என்று எழுதியுள்ளார். நேருஜி 1962-ல் உதம் சிங்கின் செயலைப் பாராட்டி அவர் போன்றவர்களால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறினார்.
English Summary
Mr Thiran Chinnamalais remembrance day