எந்த காலத்திலும் திமுகவின் ஆட்சியை பாஜகவால் கலைக்க முடியாது - கனிமொழி காட்டம்.!  - Seithipunal
Seithipunal


எந்த காலத்திலும் திமுகவின் ஆட்சியை பாஜகவால் கலைக்க முடியாது - கனிமொழி காட்டம்.! 

சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்,  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, எம்பி கனிமொழி பேசியதாவது, "பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகளின் அணி, மக்களவைத் தேர்தலில் ஆட்சியை மாற்றிக் காட்டும். 

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் திமுகவின் ஆட்சியை பாஜகவால் கலைக்க முடியாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும்" என்று அவர் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp kanimozhi speach in public meeting chennai cythapet against governor


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->